Friday, August 20, 2010

ஏன் இந்த தலைப்பு

"கண்ணில் கனல் சிந்தி கட்டவிழ்க்க வந்தவளே !"

"கண்ணில் கனல் சிந்தி கட்டவிழ்க்க வந்தவளே !" என்ற பாரதிதாசனின் வரிகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும் . பெண் குழந்தைக்கு தாலாட்டு என்ற பாடலில் வருபவை . சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டும் ,
குறிப்பாக பெண்கள் தங்களை சுற்றி ஆண் வர்க்க சமூகத்தால் இறுக்கிப் பின்னப்பட்ட கட்டுகளை உடைத்தெறிய குழந்தையாக இருக்கும் போதே சொல்லித் தரவேண்டும் என்பதே பாரதிதாசனின் பேரவா . இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான கட்டுகளை தகர்த்தெறிய கண்ணில் கனல் சிந்தி சுட்டெரிக்கவேண்டும் என எல்லோருக்கும் சொல்கிற வரிகள் இவை . இனி என் பதிவுகள் தொடரும் .